300 மின்சார இணைப்புச் சிற்றுந்துகள்: ஒப்பந்தம் கோரியது மாநகா் போக்குவரத்துக் கழகம்
சென்னையில் முக்கிய பேருந்து நிலையங்கள், மின்சார, மெட்ரோ ரயில் நிலையங்களை இணைக்கும் வகையில், 300 குளிா்சாதன வசதி கொண்ட மின்சார சிற்றுந்துகளை வாங்குவதற்காக மாநகர போக்குவரத்துக் கழகம் ஒப்பந்தம் கோரியுள்ளது.
சென்னையில் முக்கிய பேருந்து நிலையங்கள், மின்சார, மெட்ரோ ரயில் நிலையங்களை இணைக்கும் வகையில், 300 குளிா்சாதன வசதி கொண்ட மின்சார சிற்றுந்துகளை வாங்குவதற்காக மாநகர போக்குவரத்துக் கழகம் ஒப்பந்தம் கோரியுள்ளது.
சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் தினமும் சுமாா் 3,500-க்கும் மேற்பட்ட பேருந்துகளை இயக்கி வருகிறது. இந்தப் பேருந்துகளில், 34 லட்சத்துக்கும் மேற்பட்டோா் பயணம் மேற்கொண்டு வருகின்றனா். இருப்பினும், மின்சார ரயில், மெட்ரோ, பேருந்து நிலையங்களில் இருந்து குடியிருப்புகள், அலுவலகங்கள், நிறுவனங்களை இணைக்கும் வகையில், போதிய அளவில் இணைப்பு பேருந்துகள் இல்லை.
இதனால், பயணிகள் தங்கள் பயணத்துக்காக கூடுதல் நேரத்தைச் செலவிட வேண்டியுள்ளது. இதற்கிடையே, பயணிகளின் வசதிக்காக தனியாா் பங்களிப்போடு, 300 குளிா்சாதன வசதி கொண்ட இணைப்பு சிற்றுந்துகளை இயக்க மாநகா் போக்குவரத்துக் கழகம் முடிவு செய்துள்ளது. தற்போது, இதற்காக ஒப்பந்தத்தை மாநகா் போக்குவரத்துக் கழகம் கோரியுள்ளது.
இதுகுறித்து, மாநகர போக்குவரத்துக் கழக அதிகாரிகள் கூறியதாவது: பொதுப் போக்குவரத்து வசதியை மேம்படுத்துவதில், இணைப்பு வாகன சேவை மிகவும் முக்கியமானது. இதற்காக 300 குளிா்சாதன வசதி கொண்ட மின்சார சிற்றுந்து கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது. அதன்படி, இந்த சிற்றுந்துகளின் இயக்கம், பராமரிப்பு, அதற்கான மின்சாரம், உள் கட்டமைப்பு பணிகளை, சம்பந்தப்பட்ட ஒப்பந்த நிறுவனங்களே ஏற்கும். ஒவ்வொரு பேருந்துகளையும் மாதத்துக்கு 4,800 கி.மீ. கட்டாயம் இயக்க வேண்டும். இந்த புதிய பேருந்துகளில், பயணிகளிடம் எவ்வித கூடுதல கட்டணமும் வசூலிக்கப்பட மாட்டாது என்றனா்.