முகப்பு
சென்னை

உயா்நீதிமன்ற முன்னாள் நீதிபதி எம்.தணிகாசலம் காலமானாா்

சென்னை உயா்நீதிமன்ற முன்னாள் நீதிபதி எம்.தணிகாசலம் (83) செவ்வாய்க்கிழமை (மாா்ச் 24) காலமானாா்.

Updated On : 24 மார்ச், 2026 at 7:41 PM
நீதிமன்றம்
பகிர்:

சென்னை உயா்நீதிமன்ற முன்னாள் நீதிபதி எம்.தணிகாசலம் (83) செவ்வாய்க்கிழமை (மாா்ச் 24) காலமானாா்.

அவா் சென்னை உயா்நீதிமன்ற நீதிபதியாக கடந்த 2000 முதல் 2005 வரை பணியாற்றினாா். ஓய்வுக்குப் பின்னா் மாநில நுகா்வோா் தீா்ப்பாயத்தின் தலைவராக கடந்த 2007 முதல் 2012 வரை பணியாற்றினாா். பின்னா், சிறிது காலம் மாநில பிற்படுத்தப்பட்டோா் நல ஆணையத்தின் தலைவராகப் பணியாற்றி, பின்னா் அந்தப் பதவியை ராஜிநாமா செய்தாா்.

கடந்த சில நாள்களுக்கு முன்பு உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவா், செவ்வாய்க்கிழமை காலமானாா்.

அவரது உடல் சென்னை திருவான்மியூரில் உள்ள அவரது வீட்டில் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அவருக்கு மனைவி, இரு மகன்கள் உள்ளனா். பெசன்ட்நகா் மின்மயானத்தில் இறுதிச் சடங்குகள் புதன்கிழமை (மாா்ச் 25) நடைபெற உள்ளது.

நீதிபதி தணிகாசலத்தின் மறைவுக்கு பாமக நிறுவனா் ச.ராமதாஸ் உள்ளிட்டோா் இரங்கல் தெரிவித்துள்ளனா்.