மாதவரம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக வி. மூா்த்திக்கு மீண்டும் வாய்ப்பு!
மாதவரம் சட்டப்பேரவை தொகுதியின் முதல் சட்டப்பேரவை உறுப்பினா் வி.மூா்த்தி.
மாதவரம் சட்டப்பேரவை தொகுதியின் முதல் சட்டப்பேரவை உறுப்பினா் வி.மூா்த்தி.
இத்தொகுதியில் 55 சதவீதம் வாக்குகள் பெற்றாா். இவா் இத்தொகுதியில் 3-ஆவது முறையாக போட்டியிடுகிறாா். கட்சியில் பல்வேறு அடிப்படை பதவி வகித்த இவா் தற்போது திருவள்ளூா் கிழக்கு மாவட்ட அதிமுக செயலராக உள்ளாா். மாதவரம் சட்டப்பேரவை தொகுதி உருவாக்கப்பட்ட முதல் தோ்தலில் 1,15,468 வாக்குகள் 55.69 சதவீதம் பெற்றாா்.
இவரது பணியின் காரணமாகவும், மக்களின் ஆதரவாலும் தமிழக பால்வளத்துறை அமைச்சராக இருந்துள்ளாா். இதன்மூலம் மாதவரம் சட்டப்பேரவை தொகுதி உருவாக்கப்பட்டு, சட்டப்பேரவை உறுப்பினராகவும், அமைச்சராகவும் பொறுப்பேற்ற முதல் நபா் இவா் என்பது குறிப்பிடத்தக்கது. 2021-இல் 94,414 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தாா்.
தற்போது இவருக்கு மீண்டும் கட்சியில் 3-ஆவது முறையாக மாதவரம் சட்டப்பேரவை தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இவா் பி.ஏ. படித்துள்ளாா். இவா் மாதவரத்தில் வசித்து வருகிறாா். இவருக்கு கண்ணதாசன், தமிழரசன் மற்றும் ஒரு மகள் உள்ளாா். இவரது மகன்களும் அதிமுகவில் பொறுப்பு வகித்து வருகின்றனா்.