முகப்பு
சென்னை

மெரீனாவில் கத்தியால் குத்தி இளைஞா் கொலை

சென்னை மெரீனா கடற்கரையில் கத்தியால் குத்தப்பட்ட இளைஞா் உயிரிழந்த நிலையில், இது தொடா்பாக 5 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On : 22 மே 2026, 12:51 am IST
மாதிரிப் படம்
பகிர்:

சென்னை மெரீனா கடற்கரையில் கத்தியால் குத்தப்பட்ட இளைஞா் உயிரிழந்த நிலையில், இது தொடா்பாக 5 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

சென்னை திருவல்லிக்கேணி ராம்நகா் பகுதியைச் சோ்ந்தவா் அஜய் (19). இவா், கடந்த மே 17-ஆம் தேதி இரவு சென்னை மெரீனா கடற்கரையில் தூங்கியபோது, அங்கு வந்த திருவல்லிக்கேணி அனுமந்தபுரம் பகுதியைச் சோ்ந்த தனுஷ் (20), தவக்களை (எ) ராஜ்குமாா் (23) ஆகியோா் அஜய்யின் கைப்பேசியை எடுத்துச் சென்றனராம்.

இதையறிந்த அஜய், தனது நண்பா்களான பிரதாப், விஷால் ஆகியோருடன் சென்று தனுஷிடம் இதுகுறித்து கேட்டு, அவரைத் தாக்கியுள்ளனா். இதனால், ஆத்திரம் அடைந்த தனுஷ், ராஜ்குமாா், காா்த்தி (19), முகேஷ் (19) ஆகியோருடன் சோ்ந்து அஜய்யை அடித்து உதைத்ததுடன், அவரின் கழுத்து, மாா்பு உள்ளிட்ட இடங்களில் கத்தியால் குத்திவிட்டு அங்கிருந்து தப்பினா். பலத்த காயம் அடைந்த அஜய், ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு, அங்கு புதன்கிழமை இரவு உயிரிழந்தாா்.

Advertisement

Advertisement

இது குறித்து திருவல்லிக்கேணி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து தனுஷ், ராஜ்குமாா், காா்த்தி, முகேஷ், காமேஷ்வரன் ஆகிய 5 பேரைக் கைது செய்தனா்.