மதுராந்தகத்தை அடுத்த வில்வராயநல்லூர் சுபம் கல்வியியல் கல்லூரி வளாகத்தில் புதிதாக கட்டப்பட்ட வித்யாகணபதி கோயில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கல்லூரியின் தாளாளர் எஸ்.டி.மனோகர் குமார் ஏற்பாட்டில் கட்டப்பட்டது.
இக்கோயிலின் மகா கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை காலை விருத்தாசலம் கே.கல்யாண சிவாச்சாரியார் தலைமையில் நடைபெற்றது. விழாவில் மதுராந்தகம் முன்னாள் எம்எல்ஏ எஸ்.டி.உகம்சந்த், நகர்மன்ற முன்னாள் தலைவர் எஸ்.டி.பிரேம்சந்த், ஸ்ரீ ஜுவல்லரி நிறுவனர் எஸ்.டி.சுசில்குமார், அரிமா சங்க நிர்வாகிகள் ராஜசேகர், முனுசாமி, சுயம்புலிங்கம், இந்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் தூ.வெங்கடபெருமாள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.