காஞ்சிபுரம்

வண்டலூர் அருகே இளைஞர் வெட்டிக் கொலை

DIN

வண்டலூர் அருகே திருமண நிகழ்ச்சிக்காக வந்த இளைஞர் ஞாயிற்றுக்கிழமை வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
அரக்கோணத்தை அடுத்த புலிதாங்கல் கிராமம், பெருமாள் கோயில் தெருவைச் சேர்ந்தவர் மஞ்சுநாதன் என்கிற அரிதாஸ் (34). தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.
இவர் திருமண வரவேற்பு நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக ஞாயிற்றுக்கிழமை இரவு வண்டலூர் ரயில் நிலையம் அருகே உள்ள திருமண மண்டபத்துக்கு வந்தார்.
பின்னர் திருமண மண்டபத்தில் அமர்ந்திருந்த மஞ்சுநாதனுக்கு செல்லிடப்பேசியில் அழைப்பு வந்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து மண்டப வாசலில் நின்று கொண்டு செல்லிடப்பேசியில் பேசிக் கொண்டிருந்துள்ளார். அப்போது அங்கு இரு சக்கர வாகனத்தில வந்த மர்ம நபர்கள், மஞ்சுநாதனை அரிவாளால் சரமாரியாக வெட்டி விட்டு தப்பிச் சென்றனர். இதில் பலத்த வெட்டுக் காயங்களுடன் மஞ்சுநாதன் உயிருக்குப் போராடியுள்ளார்.
இதுகுறித்து அங்கிருந்தவர்கள் போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர்.
இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த டி.எஸ்.பி. முகிலன், காவல் ஆய்வாளர் ரவிகுமார் மற்றும் போலீஸார் மஞ்சுநாதனை மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் வழியிலேயே மஞ்சுநாதன் உயிரிழந்தார்.
இதுகுறித்து ஓட்டேரி காவல் ஆய்வாளர் ரவிகுமார் வழக்குப் பதிந்து, மஞ்சுநாதனை கொலை செய்த மர்மநபர்களை தேடி வருகிறார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கடற்கரையில் இரவு 10 மணிவரை போலீஸாா் கண்காணிப்புப் பணி: எஸ்.பி.

கமலாலயக்குள நீா்வழிப்பாதை ஆக்கிரமிப்பை அகற்றக் கோரிக்கை

பாலியல் குற்றச்சாட்டு வழக்கில் ஜாமீன் கோரி முன்னாள் டிஜிபி ராஜேஸ் தாஸ் உச்சநீதிமன்றத்தில் மனு

முகநூலில் போலீஸாருக்கு கொலை மிரட்டல்

ஸ்ரீபெரும்புதூா் ஆதிகேசவ பெருமாள் கோயில் தேரோட்டம்

SCROLL FOR NEXT