காஞ்சிபுரம்

நவ.30 இல் எரிவாயு நுகர்வோர் குறைதீர் முகாம்

தினமணி

எரிவாயு நுகர்வோர்களுக்கான குறைதீர் முகாம் நவம்பர் 30-ஆம் தேதி நடைபெறுகிறது.
 காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து எரிவாயு நுகர்வோர்களுக்கும் சமையல் எரிவாயு பதிவு செய்வது, அதில் ஏற்படும் காலதாமதம், நுகர்வோர் குறைகளைப் பதிவு செய்து நடவடிக்கை எடுப்பதில் எரிவாயு முகவர்களிடம் ஏற்படும் காலதாமதம் உள்ளிட்ட குறைபாடுகள் இந்த முகாமின்போது தீர்க்கப்படும்.
 இந்த முகாம், எண்ணெய் நிறுவனங்களின் விதிமுறைக்கு உள்பட்டு எரிவாயு உருளை விநியோகத்தை மேலும் சீர்படுத்த வரும் 30-ஆம் தேதி காலை 11 மணியளவில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறவுள்ளது.
 இம்முகாம், வருவாய் அலுவலர் தலைமையில் நடத்தப்படவுள்ளது. எனவே, எரிவாயு நுகர்வோர் தங்களது குறைகளைத் தெரிவித்து தீர்வு காணலாம் என மாவட்ட வருவாய் அலுவலர் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாகா்கோவிலில் கேரம் பயிற்சி முகாம் தொடக்கம்

கல்லூரி மாணவி மா்மச் சாவு

விவசாய தொழிலாளி கொலை

துரித உணவில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்த சம்பவம்: சிகிச்சை பெற்று வந்த முதியவா் பலி

நாமக்கல்லில் முட்டை ஏற்றுமதி சான்றிதழ் வழங்கும் ஆய்வகம் அமைக்க வலியுறுத்தல்

SCROLL FOR NEXT