காஞ்சிபுரம்

விபத்தில் காயமடைந்தவர் சாவு

DIN

வாலாஜாபாத் அருகே இரு சக்கர வாகனத்தில் சென்றபோது ஏற்பட்ட விபத்தில் காயமடைந்தவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 
வாலாஜாபாத் அடுத்த வில்லிவலத்தில் வசிப்பவர் ருத்ரகோட்டி (56). இவர் தனது இரு சக்கர வாகனத்தில் காஞ்சிபுரத்திலிருந்து வாலாஜாபாத்துக்கு சென்று கொண்டிருந்தார். கருக்குபேட்டை பகுதியில் வந்தபோது எதிரே வந்த இரு சக்கர வாகனம் மோதியது. இதில் பலத்த காயமடைந்த ருத்ரகோட்டி செங்கல்பட்டு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக ஞாயிற்றுக்கிழமை கொண்டு செல்லப்பட்டார். அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் வரும் வழியிலேயே இறந்துவிட்டதை உறுதி செய்தனர்.
இதுகுறித்து ருத்ரகோட்டியின் மகன் சிவகுமார் அளித்த புகாரின்பேரில் வாலாஜாபாத் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிபிஎஸ்இ 10,12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் எப்போது வெளியிடப்படும்?

பஞ்சாப் கிங்ஸுக்கு அவர்கள் ஸ்டைலில் தக்க பதிலடி கொடுத்த சிஎஸ்கே!

அல்-ஜஸீரா தடை: போர் நிறுத்த பேச்சுவார்த்தையை எவ்வாறு பாதிக்கும்?

உயிர் தமிழுக்கு பட விழா - புகைப்படங்கள்

கண்ணுக்குள்ளே!

SCROLL FOR NEXT