காஞ்சிபுரம்

திருமலை வையாவூரில் திருவோண தீப விழா

தினமணி

மதுராந்தகத்தை அடுத்த திருமலை வையாவூர் ஸ்ரீபிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயிலில் ஐப்பசி மாத திருவோண தீப விழா சனிக்கிழமை நடைபெற்றது.
 கோயில் தலைமை அர்ச்சகர் தேவராஜ் பட்டாச்சாரியார் கருவறை பெருமாள் சந்நிதியில் அகண்ட கலயத்தில் தீபம் ஏற்றினார். பின்னர் மேளதாளம் முழங்க பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக கோயில் பிரகாரம் முழுவதும் வலம் வந்து, மீண்டும் சந்நிதியில் வைக்கப்பட்டது.
 இந்நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமியை தரிசனம் செய்தனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் செந்தில்குமார் தலைமையிலான விழாக்குழுவினர் செய்திருந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிதம்பரம்: வடலூர் பெருவெளி ஆர்ப்பாட்டத்திற்கு சென்றவர்கள் கைது!

கோடைக்காலம் வந்துவிட்டது...!

உதகைக்கு 5 நிமிடத்திற்கு ஒரு பேருந்து: போக்குவரத்து கழகம் அறிவிப்பு!

பூமியை நெருங்கும் எரிகற்கள்: எச்சரிக்கும் நாசா! என்ன நடக்கும்?

அழகிய தமிழ்மகள்...!

SCROLL FOR NEXT