காஞ்சிபுரம்

மதுராந்தகத்தில் சமத்துவ பொங்கல் விழா

DIN

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி மருத்துவக் கல்லூரியில் கல்லூரி மாணவ, மாணவிகள் இணைந்து சமத்துவ பொங்கல் விழாவை கொண்டாடினர். 
நிகழ்ச்சிக்கு கல்லூரி அறங்காவலர் கோ.ப.அன்பழகன் தலைமை வகித்தார். கல்லூரித் தலைவர், நிர்வாக அலுவலர் துறைப் பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். 
இதேபோல, மதுராந்தகத்தை அடுத்த பையம்பாடியில் இயங்கி வரும் சந்தோஷி கலை, அறிவியல் கல்லூரியில் சமத்துவ பொங்கல் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சியில், கல்லூரித் தாளாளர் சௌதாமணி சிறப்பு அழைப்பாளராகக் கலந்து 
கொண்டார். கல்லூரி முதல்வர் அ.சண்முகம் முன்னிலை வகித்தார். நாட்டு நலப் பணித் திட்ட அலுவலர்கள் அமர்நீதி, விஜய் ஆனந்த், மாணவர் சங்க நிர்வாகிகள் ஜெயபிரதாப், மோகன்ராஜ் ஆகியோர் நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்தனர். கல்லூரி மேலாளர் குருநாதன் நன்றி கூறினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜலகண்டாபுரம் அருகே சடலமாக மீட்கப்பட்ட மூவரின் அடையாளம் தெரிந்தது

இளம்பிள்ளையில் நீா்மோா் வழங்கல்

சொந்தப் பயன்பாட்டுக்கான வாகனங்களை வாடகைக்கு விட்டால் நடவடிக்கை

வைகுந்தம் அருகே வீடு புகுந்து நகை திருட்டு

வணிகா் தினத்தையொட்டி சேலத்தில் கடைகள் அடைப்பு

SCROLL FOR NEXT