8 வழிச்சாலை திட்டம் வேண்டாம்: அரும்புலியூர் கிராமத்தினர் ஆட்சியரிடம் மனு
சென்னை-சேலம் 8 வழி பசுமைச்சாலை திட்டம் வேண்டாம் என்று வலியுறுத்தி அரும்புலியூர் கிராமத்தினர் திங்கள்கிழமை ஆட்சியரிடம் தனித்தனியாக மனு
சென்னை-சேலம் 8 வழி பசுமைச்சாலை திட்டம் வேண்டாம் என்று வலியுறுத்தி அரும்புலியூர் கிராமத்தினர் திங்கள்கிழமை ஆட்சியரிடம் தனித்தனியாக மனு
அளித்தனர்.
இதுகுறித்து அம்மனுவில் கூறியிருப்பதாவது:
காஞ்சிபுரம் மாவட்டம் உத்தரமேரூர் வட்டம் அரும்புலியூர் கிராமத்தின் வழியாக சென்னை- சேலம் 8 வழிச்சாலை பசுமைத் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. இதற்காக, அவ்வழியில் உள்ள 20 வீடுகள், விவசாய நிலங்கள் உள்ளிட்டவை கையகப்படுத்தப்படவுள்ளது. இதனால், எங்களது உடைமைகளை இழக்க நேரிடுகிறது. இழப்பீடு, மாற்று இடம் ஆகியவற்றில் எங்களுக்கு உடன்பாடில்லை.
மேலும், இத்திட்டத்துக்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறோம். பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகள், வீடுகளை இழப்போர் ஆகியோர் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்துடன் இணைந்து தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறோம்.
இத்திட்டத்தை எங்கள் பகுதியில் செயல்படுத்த வேண்டாம். எனவே, ஆட்சியர் எங்களது கோரிக்கையை ஏற்று நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் தெரிவித்துள்ளனர்.
அப்போது, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் ஜி.மோகனன், மாவட்ட செயலாளார் கே.நேரு உள்ளிட்டோர் உடனிருந்தனர்.