தெற்காசியாவின் நீர் பாதுகாப்பு இயக்கம் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் ராஜீவ்காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு நிறுவனம் இணைந்து நடத்திய மூன்றாம் பாலினத்தவர்களுக்கான சுகாதாரம் குறித்த மாநில அளவிலான ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
ராஜீவ் காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு மையத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, தெற்காசியாவின் நீர் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் சீதாராமன் தலைமை வகித்தார். இதில், தோழி அமைப்பின் நிர்வாகி சுதா, டிரான்ஸ் உமன் ஆக்டிவிட்டிஸ் நிர்வாகி ஓல்காபிஆரோன், ரோஸ் வெங்கடேஷ், டெல்பினா, ராஜேஸ்வரி, ராஜீவ்காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு மையத்தின் பாலின கல்வித் துறை தலைவர் கோபிநாத் ஆகியோர் ஆலோசனைகளை வழங்கினர். கூட்டத்தில் மூன்றாம் பாலினத்தவர்களுக்கான சுகாதார வளாகங்கள் அமைப்பது, அவர்களுக்கு சமூகத்தில் ஏற்படும் பிரச்னைகளைத் தீர்ப்பது குறித்து விவாதிக்கப்பட்டது.