கார் ஓட்டுநரைத் தாக்கி ரூ. 4 லட்சம் கொள்ளை
மாதவரம் அருகே கார் ஓட்டுநரைத் தாக்கி ரூ. 4 லட்சம் ரொக்கப்பணத்தை மர்ம நபர்கள் கொள்ளை அடித்துச் சென்றனர்.
மாதவரம் அருகே கார் ஓட்டுநரைத் தாக்கி ரூ. 4 லட்சம் ரொக்கப்பணத்தை மர்ம நபர்கள் கொள்ளை அடித்துச் சென்றனர்.
சென்னை சௌகார்பேட்டையைச் சேர்ந்தவர் ஜிதேந்தர் (54). இவர், ஊவர் மாதவரம் அருகே பழைய அலுமினியம், காப்பர் ஆகியவற்றை உருக்கும் தொழிற்சாலை நடத்தி வருகிறார். இவரிடம் வியாசர்பாடி முல்லைநகர் 16-ஆவது தெருவைச் சேர்ந்தவர் அருண் (27) கார் ஓட்டுநராகப் பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில், மாதவரத்தைச் சேர்ந்த புக்ராஜிடம் பழைய காப்பர் வாங்கியதற்காக ரூ. 4 லட்சம் வழங்குவதற்காக புதன்கிழமை அருண் சென்னையில் இருந்து மாதவரத்துக்கு காரில் சென்று
கொண்டிருந்தார்.
பொன்னியம்மன்மேடு ஜிஎன்டி சாலை அருகே வந்த போது, பைக்கில் வந்த மர்ம நபர்கள் இருவர் காரை வழிமறித்து அருணை தாக்கியுள்ளனர். மேலும், கத்தியை காட்டி மிரட்டி அவரிடம் இருந்து ரூ. 4 லட்சத்தை கொள்ளை அடித்துச் சென்றனர்.
இதுகுறித்த புகாரின் பேரில் மாதவரம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, மர்ம நபர்களைத் தேடி வருகின்றனர்.