பள்ளியில் ஆண்டு விழா
மதுராந்தகம் அஹோபிலமடம் ஓரியண்டல் உயர்நிலைப்பள்ளியின் 75-ஆவது ஆண்டு விழா பள்ளி வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.
மதுராந்தகம் அஹோபிலமடம் ஓரியண்டல் உயர்நிலைப்பள்ளியின் 75-ஆவது ஆண்டு விழா பள்ளி வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சியில், கல்லூரி முதல்வர் சௌ.வரதகோபாலகிருஷ்ணன் வரவேற்றார். கல்வி நிலையங்களின் அறங்காவலர்கள் தா.ப.கண்ணன், தி.க.சீனிவாசன், நெ.வி.பாலாஜி, பா.ரா.ரங்கநாத் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் என்.கோபாலசுவாமி பங்கேற்று விழா மலரை வெளியிட்டார்.
பள்ளி மாணவர்களுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. பின்னர், மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. பள்ளித் தலைமை ஆசிரியர் சே.வெங்கிடவரதன் நன்றி கூறினார்.