குட்டித் தூக்கம் போடுபவர்களுக்காக போட்டி நடத்திய தென் கொரியா!
தென் கொரியாவில் குட்டித் தூக்கம் போடுபவர்களுக்கான போட்டியை அரசு நடத்தியுள்ளது.
தென் கொரியாவில் குட்டித் தூக்கம் போடுபவர்களுக்கான போட்டியை அரசு நடத்தியுள்ளது.
பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டு அமைப்பின் உறுப்பு நாடுகளில் அதிக வேலைப்பளு மற்றும் தூக்கமின்மையால் அவதிப்படும் நாடாக தென் கொரியா இருந்து வருகிறது.
இதுதொடர்பாக ஏற்படும் மனச்சோர்வு, தூக்கமின்மை பற்றி மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக சியோல் பெருநகர அரசு ஓய்வைக் கொண்டாடும் நோக்கத்தில் ஒரு பொது நிகழ்வை முன்னெடுத்து வருகின்றது.
Advertisement
Advertisement
இதன்படி, நன்றாக ஆழ்ந்து குட்டித் தூக்கம் போடும் நபர்களுக்கென போட்டி நடத்தி அதில் வெற்றி பெறுபவர்களுக்கு அரசு சார்பில் பரிசு வழங்கப்படுகின்றது. இந்நிகழ்வு 3 ஆண்டுகளாகத் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றது.
இந்தாண்டுக்கானப் போட்டி சியோல் நகரின் ஹன்காங் ஆற்றின் கரையில் உள்ள யூடோ ஹன்காங் பூங்காவில் இன்று நடைபெற்றது.
இந்தப் போட்டியில் கலந்துகொள்ள குறிப்பிடத்தக்க விதிமுறைகள் பின்பற்றப்படுகின்றது. இதில், பங்கேற்க விண்ணப்பிக்கும் நபர்களிடம் “உங்களுக்கு ஏன் குட்டித் தூக்கம் தேவைப்படுகிறது?” என்ற கேள்வி கேட்கப்பட்டு அதற்கு அவர்கள் தெரிவிக்கும் பதிலின் மூலம் இந்தப் போட்டியில் கலந்துகொள்ள தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். இதன்படி, இந்தாண்டு போட்டியில் 170 பேர் கலந்துகொண்டனர்.
போட்டியில் வெற்றி பெறுவதற்கு கண்களை வெறுமனே மூடுவது மட்டும் போதாது. இதில், போட்டியாளர்கள் ஒவ்வொருவருக்கும் இதயத் துடிப்பைக் கணக்கிடும் கருவிகள் வழங்கப்படும்.
அதன்மூலம், இதயத் துடிப்பு எந்த அளவிற்கு குறைந்து சீராக இருக்கிறது எனக் கணக்கிட்டு, குறிப்பிட்ட 2 மணி நேரத்திற்குள் ஆழ்ந்த தூங்குபவருக்கு அதற்கான மதிப்பெண் வழங்கப்பட்டு வெற்றியாளர் தேர்ந்தெடுக்கப்படுவார்.
தூக்கத்தைக் கலைக்க கொசு பறப்பதைப் போன்ற சத்தம், இறகுகளால் வருடுவது என நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் அவ்வப்போது இடையூறுகளை ஏற்படுத்துவார்கள்.
இதில், வெற்றி பெறுபவருக்கு பரிசுத்தொகையாக ரூ. 32,000 (இந்திய மதிப்பில்) மற்றும் வெற்றிக் கோப்பையும் வழங்கப்படும்.
இன்று நடைபெற்ற போட்டியில் நூற்றுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் கலந்துகொண்ட நிலையில் 80 வயது முதியவர் ஒருவர் வெற்றி பெற்றுள்ளார். இவருக்கு அடுத்ததாக, 37 வயதான அலுவலகப் பணிசெய்யும் நபர் ஒருவர் இரண்டாம் இடம்பிடித்துள்ளார்.
South Korea Held a Competition for Nappers
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.