வாக்குப்பதிவு இயந்திரங்கள்: முதல்நிலை சரிபார்க்கும் பணி: ஆட்சியர் ஆய்வு
வாக்குப்பதிவு இயந்திரங்கள் முதல்நிலை சரிபார்க்கும் பணியை ஆட்சியர் பா.பொன்னையா திங்கள்கிழமை நேரில் ஆய்வு
வாக்குப்பதிவு இயந்திரங்கள் முதல்நிலை சரிபார்க்கும் பணியை ஆட்சியர் பா.பொன்னையா திங்கள்கிழமை நேரில் ஆய்வு செய்தார்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் வரும் நாடாளுமன்றத் தேர்தலையொட்டி, புதியதாகத் தயாரிக்கப்பட்ட 10,170 எம்-3 வாக்குப்பதிவு இயந்திரங்கள், கன்ட்ரோல் யூனிட்டுகள், சரிபார்க்கும் இயந்திரங்கள் ஆகியவை பெல் நிறுவனத்திலிருந்து கொண்டுவரப்பட்டு சேமிப்புக் கிடங்கில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. இந்த இயந்திரங்களின் சரிபார்ப்புப் பணியானது, ஆட்சியர் தலைமையில், பெல் நிறுவனப் பொறியாளர்களுடன் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரமுகர்கள் முன்னிலையில் முதல்நிலை சரிபார்க்கும் பணி திங்கள்கிழமை நடைபெற்றது.
அதைத் தொடர்ந்து, தேர்தலுக்கு 60 நாள்களுக்கு முன்பு இரண்டாம் நிலை சரிபார்த்தல் பணியும், தேர்தலுக்கு முன் மூன்றாம் கட்ட சரிபார்த்தல் பணியும் நடைபெறவுள்ளன.
ஆய்வின்போது, மாவட்ட வருவாய் அலுவலர் சுந்தரமூர்த்தி, வருவாய் கோட்டாட்சியர் ராஜு, நேர்முக உதவியாளர் ரவிச்சந்திரன், வட்டாட்சியர் காஞ்சனா மாலா, தனி வட்டாட்சியர் வாசுதேவன், அனைத்து அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.