காஞ்சிபுரம்

வட்டாட்சியர் அலுவலகத்தில் பராமரிப்பு இல்லாத கழிப்பறைகள்

தினமணி

ஸ்ரீபெரும்புதூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள கழிப்பறைகள் முறையாக பராமரிப்பு செய்யப்படாததால் துர்நாற்றம் வீசி வருவதால் பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
 இந்த வட்டாசியர் அலுவலகத்திற்கு பல்வேறு கோரிக்கைகளுக்காக தினமும் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் வந்து செல்கின்றனர். இங்கு பொதுமக்களின் பயன்பாட்டுக்காக மூன்று கழிப்பறைகள் உள்ளன. இவை முறையாக பராமரிக்கப்படாததால் துர்நாற்றம் வீசி வருகிறது. இதன் காரணமாக, இந்த கழிப்பறைகளை பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது.
 இதனால் இயற்கை உபாதைகளைக் கழிக்க பொதுமக்கள் குறிப்பாக பெண்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். எனவே இந்தக் கழிப்பறைகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்ரீஜெயேந்திர சரஸ்வதி மணி விழா மெட்ரிக். பள்ளி 100% தோ்ச்சி

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 92.91% தோ்ச்சி

புதுச்சேரி, காரைக்காலில் 55 பள்ளிகள் 100% தோ்ச்சி

சிதம்பரம் பள்ளிகள் தோ்ச்சி விவரம்

பாரதி மெட்ரிக் பள்ளி 100% தோ்ச்சி

SCROLL FOR NEXT