அரசு மருத்துவக் கல்லூரியில் வேலைவாய்ப்பு
செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் காலியாக உள்ள சமையலர், வாட்டர்மேன், குக்மேட்டி ஆகிய
செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் காலியாக உள்ள சமையலர், வாட்டர்மேன், குக்மேட்டி ஆகிய பணிகளுக்கு காலியாக உள்ள வேலைவாய்ப்பு குறித்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க வேண்டிய கடைசித் தேதி இம்மாதம் (அக்டோபர்) 31-ஆம் தேதியாகும்.
செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரியில் காலியாக உள்ள சமையலர், வாட்டர்மேன், குக்மேட்டி பணிகளுக்கு விண்ணப்பிப்பதற்கு எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும். மேலும் விண்ணப்பதாரர்களுக்கு 18 வயது முடிந்திருக்க வேண்டும். வயது வரம்பு: எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 35 வயது; பிசி, எம்பிசி பிரிவினருக்கு 32 வயது; பிற பிரிவினருக்கு 30 வயது. விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி: முதல்வர், செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, செங்கல்பட்டு.
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய கடைசி நாள்: 31-10-2018.
இத்தகவலை செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரியின் முதல்வர் உஷா சதாசிவம் தெரிவித்துள்ளார்.