காஞ்சிபுரம்

வாழ்நாளில் 100 மரக்கன்றுகளை நட்டு வளர்ப்போம்: உறுதிமொழி ஏற்ற மாணவர்கள்

DIN


தங்கள் வாழ்நாளில் 100 மரக்கன்றுகளையாவது நட்டு வளர்ப்போம் என கைத்தண்டலம் கிராமத்தில் மாணவர்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
காஞ்சிபுரம் மாவட்டம், சாலவாக்கம் ஊராட்சிக்கு அடுத்து கைத்தண்டலம் எனும் கிராமம் உள்ளது. இக்கிராமத்தில் வசித்து வருபவர் மரம் மாசிலாமணி. இவர் இயற்கை விவசாயி. அதோடு, தனது 14 ஏக்கர் நிலத்தில் எழில்சோலை எனும் பெயரில் பல்வேறு அரிய வகை மரங்கள், மூலிகைகள், நர்சரி பண்ணை உள்ளிட்டவற்றை வளர்த்து பராமரித்து வருகிறார். மேலும், பறவையினங்கள், பாம்புகள், பூச்சிகள், நாட்டுக்கோழியினங்கள் என பல்வேறு உயிரினங்களுக்கு அடைக்கலமாய் இவரது தோட்டம் விளங்கி வருகிறது. இதனால், இவரது தோட்டத்தைக் காண நாள்தோறும் வேளாண் ஆராய்ச்சி மாணவர்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் என பலர் ஆர்வத்துடன் வந்து செல்கின்றனர். அவ்வகையில், காஞ்சிபுரத்தில் உள்ள சுறா நீச்சல் மன்றம் சார்பில் சுமார் 60-க்கும் மேற்பட்ட பள்ளிக் குழந்தைகளுடன் ஆசிரியர்கள், பெற்றோர் என பலரும் ஞாயிற்றுக்கிழமை வந்திருந்தனர். 
அங்கு அவர்கள், பூவரசு, வில்வம், மூங்கில் உள்ளிட்ட பல்வேறு மரங்கள், பறவைக்கூடுகள் ஆகியவற்றைப் பார்வையிட்டு, இயற்கை விவசாயம், பல்லுயிர்ப் பெருக்கம், தேன்வளர்ப்பு, சுற்றுச்சூழல் உள்ளிட்ட விஷயங்கள் குறித்து ஆர்வத்துடன் கேட்டறிந்தனர். 
தொடர்ந்து, மாணவர்கள் அனைவரும் அங்குள்ள தோட்டத்தில் இருந்த மரங்களைக் கட்டியணைத்து, மரங்களை நேசிக்கிறேன். எனது வாழ்நாளில் 100 மரக்கன்றுகளையாவது நட்டு வைத்துப் பராமரிப்பேன்' என உறுதிமொழி ஏற்றனர். தொடர்ந்து, பாரம்பரிய விளையாட்டுகள், உறியடி உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு மகிழ்ச்சியுடன் வீடு திரும்பினர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெப்ப அலை: தொழிலாளா்கள் பாதிக்காத வகையில் பணி நேரம்

இன்று நல்ல நாள்!

12 ராசிக்குமான தினப்பலன்!

திருப்பருத்திக்குன்றத்தில் மகாவீரா் ஜெயந்தி

திமுக சாா்பில் நீா்மோா் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT