காஞ்சிபுரம்

சக்திவிநாயகர் கோயிலில் அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் வழிபாடு

தினமணி

செங்கல்பட்டு சார் ஆட்சியர் அலுவலகம் எதிரில் உள்ள சக்தி விநாயகர் கோயிலில் தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் ஞாயிற்றுக்கிழமை வழிபட்டார்.
 அவர் தென்மாவட்டத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின் சென்னை நோக்கி சென்று கொண்டிருந்தார். வழியில் செங்கல்பட்டு வந்த அவர் இக்கோயிலுக்கு வந்து சுவாமி தரிசனம் செய்தார். அமைச்சர் வருகை தருவதை அறிந்த அதிமுக நகர செயலாளர் செந்தில்குமார் உள்ளிட்ட நிர்வாகிகள்அவரை வரவேற்றனர்.
 கோயில் செயல் அலுவலர் செந்தில்குமார் உள்ளிட்ட பணியாளர்கள் அமைச்சருக்கு சிறப்பு தரிசனத்திற்கான ஏற்பாடுகளை செய்தனர். விநாயகருக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, அமைச்சருக்கு மாலை மரியாதை அளித்து கோயில் பிரசாதங்களை வழங்கி வழியனுப்பி வைத்தனர். இதையடுத்து, அமைச்சர் சிங்கப்பெருமாள்கோவிலை அடுத்த வல்லக்கோட்டை முருகன் கோயிலுக்கு சென்று வழிபட்டார். அங்கு கோயில் பணியாளர்கள் அமைச்சருக்கு மரியாதை செய்தனர்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பஞ்சாப் சுழலில் சிக்கிய சென்னை: மீட்டாா் கெய்க்வாட்

‘தலைமைச் செயலக பணி’: தரகா்களிடம் ஏமாறும் பட்டதாரிகள்

வாகன பதிவெண் பலகையில் ஸ்டிக்கா்: இன்றுமுதல் அபராதம்

சாதித்தீயை வளா்க்கலாமா?

விவாதப் பொருளான சொத்து வாரிசுரிமை வரி

SCROLL FOR NEXT