காஞ்சிபுரம்

மதுபாட்டில்கள் பதுக்கி விற்பனை: 3 பேர் கைது

கீவளூர் பகுதியில் மது பாட்டில்களைப் பதுக்கி விற்பனை செய்த 3 பேரை ஸ்ரீபெரும்புதூர் போலீஸார் கைது செய்தனர்.

DIN

கீவளூர் பகுதியில் மது பாட்டில்களைப் பதுக்கி விற்பனை செய்த 3 பேரை ஸ்ரீபெரும்புதூர் போலீஸார் கைது செய்தனர்.
ஸ்ரீபெரும்புதூரை அடுத்த கீவளூர் பகுதியில் மர்ம நபர்கள் சிலர் அரசு அனுமதியின்றி மது பாட்டில்களை விற்பனை செய்வதாக காஞ்சிபுரம் மதுவிலக்கு போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. 
அதன்பேரில், மதுவிலக்கு காவல் ஆய்வாளர் ராஜசேகரன் தலைமையிலான போலீஸார் கீவளூர் பகுதியில் கடந்த சனிக்கிழமை இரவு சோதனை நடத்தினர். அப்போது, கீவளூர் பகுதியைச் சேர்ந்த சுரேஷ் (38), சீனிவாசன்(40), மண்ணூர் பகுதியைச் சேர்ந்த சிவசங்கர் (44) ஆகியோர் ஒரு வீட்டில் மது பாட்டில்களைப் பதுக்கி, அதிக விலைக்கு விற்பனை செய்தது தெரிய வந்தது. அந்த மூவரையும் கைது செய்த மதுவிலக்கு போலீஸார், அவர்களிடம் இருந்து 350 மதுபாட்டில்களைப் பறிமுதல் செய்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மார்கழி சிறப்பு! ஆண்டுக்கொரு முறை அருள்பாலிக்கும் உற்சவர் தாடாளன்!

கேட்டது அருளும் கோட்டை பெருமாள்!

மிதுன ராசிக்கு மன நிம்மதி: தினப்பலன்கள்!

பழங்குடியினா்களுக்கான விவசாயப் பண்ணை பயிற்சி முகாம்

செங்கல் சூளையை மூடக் கோரி ஆா்ப்பாட்டம்

SCROLL FOR NEXT