காஞ்சிபுரம்

மாரியம்மன் கோயிலில் 16-இல் பாலாபிஷேகம்

DIN

செங்கல்பட்டை அடுத்துள்ள அம்மணம்பாக்கம் சுயம்பு சமயபுரம் மாரியம்மன் மகா சிவசக்தி பீடத்தில் 21-ஆம் ஆண்டு சித்திரைப் பெருவிழாவையொட்டி 108 பால்குட அபிஷேகம் வரும் 16-ஆம் தேதி நடைபெற உள்ளது.
 இக்கோயிலில், ஞாயிற்றுக்கிழமை (ஏப். 14) சித்திரைப் பெருவிழா தொடங்குகிறது. அன்று காலை கணபதி ஹோமம், சிவசக்தி வேள்வியுடன் சிவசக்தி அமிர்தம் அம்மையார், நிகழ்ச்சிகளைத் தொடங்கி வைக்கிறார். மாலையில் அம்மனுக்கு மாவிளக்கு பூஜை நடைபெறும்.
 விழாவின் இரண்டாம் நாளான திங்கள்கிழமை மதியம் ஏரிக்கரையில் இருந்து சிவசக்தி அமிர்தம் அம்மையார் தீச்சட்டி ஏந்தி திருவீதி வலம் வந்து அம்மனுக்கு சமர்ப்பணம் செய்கிறார். மூன்றாம் நாள் செவ்வாய்க்கிழமை காலை 8 மணிக்கு பக்தர்கள் 108 பால்குடம் எடுத்து திருவீதி வலம் வந்து அம்மனுக்கு அபிஷேகம் செய்வர். அதைத் தொடர்ந்து, மகா அபிஷேகமும், தீப ஆராதனையும் நடைபெறும்.
 விழா ஏற்பாடுகளை மகாசக்தி பீட நிறுவனர் மாரிதாசர் அமிர்தம் கண்ணுசாமி மற்றும் பொறுப்பாளர்கள் செல்வமணி, செல்வசுந்தர் ஆகியோர் செய்து வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ஓட்டு கேட்ட மோடி மன்னிப்புக்கோர வேண்டும்: ராகுல்

இந்தப் படங்களை அதிகம் விரும்புகிறேன்! சதா...

தரங்கம்பாடியில் சோகம்... வாகனத்தில் சென்ற மூன்று பேர் சாலை விபத்தில் பலி

இச்சை மூட்டும் பச்சை நிறமே...!

கேஜரிவால் கைதைக் கண்டித்து ஆம் ஆத்மி கையெழுத்து இயக்கம்!

SCROLL FOR NEXT