மாமல்லபுரத்தில் பகுஜன் சமாஜ் கட்சியின் நகர நிர்வாகிகள் சார்பில் அம்பேத்கர் பிறந்த நாளையொட்டி பள்ளி மாணவ, மாணவிகளுக்கு நோட்டுப் புத்தகங்கள், புத்தகப் பைகள் ஆகியவை செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டன.
இதற்கான விழா மாமல்லபுரம் கங்கை கொண்டான் மண்டபம் அருகே பேருராட்சி அலுவலகம் முன்பு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்த விழாவிற்கு கட்சியின் மாவட்ட இளைஞர் அணிச் செயலாளர் மல்லை ஆனந்த் தலைமை வகித்தார்.
நகர தலைவர் சதீஷ், நகர செயலாளர் கிருஷ்ணகுமார், வி.இ.ஆகாஷ், வெங்கடேஷ் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு அம்பேத்கர் உருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதன் பின், மாமல்லபுரம் பேரூராட்சிக்குட்பட்ட 15 வார்டுகளைச் சேர்ந்த பள்ளி மாணவ, மாணவிகள் 100-க்கும் மேற்பட்டவர்களுக்கு நோட்டுப் புத்தகங்கள், புத்தகப்பைகள், பேனா, பென்சில், ஸ்கேல், அழிப்பான் உள்ளிட்ட கருவிகளை பகுஜன் சமாஜ் கட்சி நிர்வாகிகள் வழங்கினர்.