முகப்பு
காஞ்சிபுரம்

"பதிவு செய்யப்படாத காப்பகங்கள் குறித்து புகார் அளிக்கலாம்'

பதிவு செய்யப்படாத காப்பகங்கள் குறித்து பொதுமக்கள்  புகார் அளிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் பா.பொன்னையா தெரிவித்துள்ளார்.

Updated On : 25 பிப்ரவரி 2019, 8:47 am IST
பகிர்:

பதிவு செய்யப்படாத காப்பகங்கள் குறித்து பொதுமக்கள்  புகார் அளிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் பா.பொன்னையா தெரிவித்துள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் மகளிர் விடுதிகள், குழந்தைகள், முதியோர் காப்பகங்கள் உள்ளிட்ட பல்வேறு காப்பகங்கள் செயல்பட்டு வருகின்றன. 
இவற்றில் பதிவு பெறாமல் செயல்படும் காப்பகங்கள் குறித்த விவரங்களைத் தெரிவிக்க, "மாவட்ட சமூக நல அலுவலர், மாவட்ட சமூக நல அலுவலகம், எண்-43, காந்திநகர் 2-ஆவது தெரு, ஐஓபி வங்கி செவிலிமேடு கிளை அருகில், காஞ்சிபுரம்' என்ற முகவரியில் அணுகலாம். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.