காஞ்சிபுரம்

கார் மோதி பெண் பலி

DIN


கூடுவாஞ்சேரி அருகே ஸ்கூட்டர் மீது கார் மோதிய விபத்தில் பெண் இறந்தார். 
ஊரப்பாக்கம் அருண் நகரைச் சேர்ந்தவர் குருசாமி (49). அவர் மனைவி பிரேமலதா (42), மகள் தர்ஷினி (18) ஆகியோருடன் வசித்து வருகிறார்.
இந்நிலையில், பிரேமலதா தன் மகள் தர்ஷினியுடன் கூடுவாஞ்சேரியில் உள்ள ஒரு தனியார் உணவகத்தில் ஞாயிற்றுக்கிழமை உணவு வாங்கிக் கொண்டு ஸ்கூட்டரில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அவர்களது ஸ்கூட்டர் மீது கார் ஒன்று மோதியது.  இதில் பலத்த காயமடைந்த இருவரையும் அங்கிருந்தவர்கள் மீட்டு பொத்தேரியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பிரேமலதா இறந்தார். இவ்விபத்து குறித்து கூடுவாஞ்சேரி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவை 3-ஆம் கட்ட தோ்தல்: வாக்குப் பதிவு தொடங்கியது!

மக்களவைத் தோ்தல்: கா்நாடகத்தில் 14 தொகுதிகளுக்கு இன்று இரண்டாம் வாக்குப் பதிவு: களத்தில் 227 வேட்பாளா்கள்

சமூக வலைதளப் பதிவு: ஜெ.பி.நட்டாவுக்கு எதிராக வழக்கு

தூத்துக்குடி மாவட்டத்தில் 96.39% தோ்ச்சி

கோவில்பட்டியில் ஆா்ப்பாட்டம்

SCROLL FOR NEXT