காஞ்சிபுரம்

அண்ணா கூட்டுறவு மேலாண்மை நிலையம்:பட்டயப் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்

அறிஞர் அண்ணா கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் கூட்டுறவு மேலாண்மை பட்டயப்பயிற்சிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

DIN


அறிஞர் அண்ணா கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் கூட்டுறவு மேலாண்மை பட்டயப்பயிற்சிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 
காஞ்சிபுரம் ஆட்சியர் அலுவலகத்துக்கு முன்பு செயல்பட்டு வரும் அறிஞர் அண்ணா கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் மேலாண்மை பட்டயப்பயிற்சிக்கு வரும் ஜூன் 14- ஆம் தேதி முதல் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 
இப்பட்டயப்பயிற்சிக்கு பிளஸ் 2 வகுப்பு மற்றும் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 வழி படித்த பட்டதாரிகள் தகுதியுடையோர் ஆவர். நிகழாண்டு ஜூன் 1 -ஆம் தேதியன்று குறைந்த பட்சம் 17 வயது பூர்த்தியாகி இருக்க வேண்டும். அதிகபட்ச வயது வரம்பு இல்லை. இப்பட்டயப் பயிற்சிக்காலம் 36 வாரங்கள். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு இட ஒதுக்கீடு வழங்கப்படும்.ஜூலை 10 -ஆம்தேதி விண்ணப்பிக்க கடைசி நாள். 
இப்பயிற்சிக்கான கட்டணம் ரூ.14,850 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.அதன்படி, பயிற்சிக்கான விண்ணப்பங்களை பேரறிஞர் அண்ணா கூட்டுறவு மேலாண்மை நிலையம், எண்:5-ஏ, வந்தவாசி சாலை, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில், காஞ்சிபுரம் - 631 501 என்ற முகவரியில் பெற்றுக்கொள்ளலாம். 
மேலும் விவரங்களுக்கு, 044-27237699 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்புகொள்ளலாம் என காஞ்சிபுரம் கூட்டுறவுச் சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மக்களவையில் விபி - ஜி ராம் ஜி மசோதா நிறைவேற்றம்! நகலைக் கிழித்தெறிந்த எதிர்க்கட்சிகள்!

வடசென்னை கதாபாத்திர புகைப்படத்தைப் பகிர்ந்த ஆண்ட்ரியா..! அரசனில் இருக்கிறாரா?

ஓடிடியில் ரஷ்மிகா மந்தனாவின் தம்மா!

தொடர்கதையாகும் வெடிகுண்டு மிரட்டல்: இன்று நாக்பூர், பாந்த்ரா நீதிமன்றத்திற்கு!

அடுத்தடுத்து வெளியாகும் நிவின் பாலியின் இணையத் தொடர், திரைப்படம்!

SCROLL FOR NEXT