காஞ்சிபுரம்

சந்தவேலூர் சமுதாயக் கூடத்தை சீரமைக்கக் கோரிக்கை

DIN

சுங்குவார்சத்திரம் அருகே உள்ள சந்தவேலூர் சமுதாய நலக் கூடத்தை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியம் சந்தவேலூர் ஊராட்சியில் சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில், கடந்த 1999-ஆம் ஆண்டில் மக்களவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் சமுதாய நலக் கூடம் கட்டப்பட்டது. இதையடுத்து சந்தவேலூர் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் தங்கள் வீட்டு சுப நிகழ்ச்சிகளை சமுதாய நலக் கூடத்தில் நடத்தி வந்தனர். இந்நிலையில், சுங்குவார்சத்திரம் பஜார் பகுதியில் பழைமையான கட்டடத்தில் இயங்கி வந்த சுங்குவார்சத்திரம் காவல் நிலையம், சந்தவேலூர் சமுதாய நலக் கூடத்துக்கு மாற்றப்பட்டு காவல் நிலையமாக செயல்பட்டு வந்தது.
 கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு, திருமங்கலம் பகுதியில் காவல் நிலையத்துக்கு புதிய கட்டடம் கட்டப்பட்டதையடுத்து காவல் நிலையம் அங்கு இட மாற்றம் செய்யப்பட்டது. அதன் பின்னர், சமுதாய நலக்கூடம் பயன்பாட்டுக்கு வரும் என பொதுமக்கள் எதிர்பார்த்தனர். ஆனால், சமுதாய நலக்கூடம் பூட்டி வைக்கப்பட்டுள்ளது. இதைச் சீரமைத்து மீண்டும் பயன்பாட்டுக்கு விட வேண்டும் என சந்தவேலூர் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியது: பல ஆயிரம் செலவு செய்து தனியார் மண்டபங்களில் நிகழ்ச்சிகளை நடத்த வேண்டிய நிலை உள்ளது. எனவே பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் சமுதாய நலக்கூடத்தை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்கு எண்ணும் பணி: குலுக்கல் முறையில் அலுவலா்கள் தோ்வு

ரஃபேல் நடால் முன்னேற்றம்

வாக்கு எண்ணும் மையம் அருகே 2 கி.மீ. சுற்றளவுக்கு டிரோன் பறக்கத் தடை

பொன்னேரி-மீஞ்சூா் இடையே போதிய பேருந்துகள் இல்லாததால் மக்கள் அவதி

ஹைதராபாதை வீழ்த்தியது சென்னை!

SCROLL FOR NEXT