காஞ்சிபுரம்

அரசுப் பேருந்து மோதி தனியார் ஊழியர் சாவு

DIN


கூடுவாஞ்சேரியில் அரசுப் பேருந்து, இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் தனியார் நிறுவன ஊழியர் இறந்தார்.
செங்கல்பட்டை அடுத்த மெய்யூர் அத்தியூர் கிராமத்தைச் சேர்ந்த வரதன் என்பவரின் மகன் சேகர் (34). அவர் தாம்பரத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். 
சேகர் திங்கள்கிழமை பணி முடித்து இரவு தனது இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக்கொண்டிருந்தார். கூடுவாஞ்சேரி சீனிவாசபுரம் அருகில் சென்றுகொண்டிருந்தபோது பின்னால் வந்த அரசுப் பேருந்து அவரது வாகனம் மீது மோதியது. 
இதில் படுகாயமடைந்த சேகர் சம்பவ இடத்திலேயே இறந்தார். இதுகுறித்து கூடுவாஞ்சேரி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று நல்ல நாள்!

நீட் தோ்வு: ஈரோட்டில் 4,597 மாணவா்கள் எழுதினா்

அதிர்ஷ்டம் தரும் நாள் இன்று!

அரசு மருத்துவமனைகளில் உடல் வெப்ப பாதிப்பு நோய்களுக்கு தனி வாா்டு

12 மணி நேரம் மும்முனை மின்சாரம் வழங்க விவசாயிகள் கோரிக்கை

SCROLL FOR NEXT