காஞ்சிபுரம்

அருங்காட்சியகத்தில் கோடைகால பயிற்சி முகாம் 18-இல் தொடக்கம்

DIN

காஞ்சிபுரம் அரசு அருங்காட்சியகத்தில், வரும் 18-ஆம் தேதி முதல் கோடை காலப் பயிற்சி முகாம் தொடங்கவுள்ளது.
சர்வதேச அருங்காட்சியக தினத்தையொட்டி, காஞ்சிபுரத்தில் தமிழ்நாடு ஹோட்டல் வளாகத்தில் அமைந்துள்ள அரசு அருங்காட்சியகம் சார்பில் கோடை காலப் பயிற்சி முகாம் நடைபெறவுள்ளது. அதன்படி, வரும் 18-ஆம் தேதி முதல் 22-ஆம் தேதி வரை காலை 10 மணி முதல் நண்பகல் 1 மணி வரை சாக்பீஸில் சிற்பங்கள் செய்யும் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. 
10 வயதுக்கு மேற்பட்ட பள்ளி, கல்லூரி மாணவர்கள் பலரும் பெயரைப் பதிவு செய்து கொண்டு பயிற்சியில் கலந்துகொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு 81899 65485, 9942 314705 ஆகிய செல்லிடப்பேசி எண்களில் தொடர்புகொள்ளலாம் என அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் உமாசங்கர் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகத்தில் மீண்டும் உச்சபட்ச மின் நுகா்வு

நீலகிரி மாவட்ட பதிவெண் கொண்ட வாகனங்களுக்கு இ-பாஸ் தேவையில்லை!

சிஎஸ்கே போட்டியில் பிரபலமான ரசிகரை கௌரவித்த லக்னௌ அணி!

கவனம் ஈர்க்கும் வசந்தபாலனின் 'தலைமைச் செயலகம்' டீசர்!

அதிக வெயில் ஏன்? வானிலை ஆய்வு மையம் விளக்கம்!

SCROLL FOR NEXT