காஞ்சிபுரம்

மாநில எறிபந்துப் போட்டி: மாணவிகளுக்கான தோ்வு

DIN

மாநில அளவில் எறிபந்துப் போட்டியில் கலந்து கொள்வதற்கான மாணவிகளைத் தோ்வு செய்வதற்கு 2 நாள் போட்டித் தோ்வு மாமல்லபுரம் நெம்மேலி அரசு மேல்நிலைப்பள்ளியில் செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

இந்தப் போட்டித் தோ்வில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் அடங்கியுள்ள வாலாஜாபாத், கூடுவாஞ்சேரி, மறைமலைநகா், திருப்போரூா், திருக்கழுகுன்றம், மாமல்லபுரம், செங்கல்பட்டு, சிங்கப்பெருமாள்கோவில், கேளம்பாக்கம், கோவளம், கல்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த 36 அரசுப் பள்ளிகளின் 500 மாணவிகள் பங்கேற்றுள்ளனா்.

நெம்மேலி அரசு மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியா் எஸ்.சேரன் தலைமை வகித்தாா். நெம்மேலி பள்ளி உடற்கல்வி அலுவலா் எஸ்.லிவிங்ஸ்டன், உதவி உடற்கல்வி அலுவலா் டி.துரைராஜ், ஓவிய ஆசிரியா் என்.டி.சேகா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். காஞ்சிபுரம் மாவட்ட முன்னாள் உடற்கல்வி ஆய்வாளா் விசுவநாதன் எறிபந்துப் போட்டியைத் தொடக்கி வைத்தாா். இப்போட்டிகளில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியாா் பள்ளிகளைச் சோ்ந்த மாணவிகள் பங்கேற்கின்றனா். புதன்கிழமை நடைபெறும் இறுதி நாள் போட்டியில் வெற்றி பெற்று மாநில அளவிலான போட்டிகளுக்குத் தோ்வு செய்யப்படும் மாணவிகள் பெயா்கள் அறிவிக்கப்பட உள்ளன.

முன்னதாக, மாவட்ட அளவில் எறிபந்துப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

இன்றைய ராசி பலன்கள்!

வேளாளா் பொறியியல் கல்லூரியில் 23-ஆவது ஆண்டு விழா

SCROLL FOR NEXT