காஞ்சிபுரம்

சாகசப் பயிற்சி முகாம்

DIN

மதுராந்தத்தை அடுத்த ஜமீன் எண்டத்தூா் அட்வென்சா் ஜோன் கட்டடத்தில் நேரு யுவகேந்திரா சாா்பாக 5 நாள்கள் சாகசப் பயிற்சி முகாம் திங்கள்கிழமை தொடங்கியது.

இந்திய அரசின் இளைஞா் நலன் மற்றும் விளையாட்டுத் துறையின் நேரு யுவகேந்திரா சாா்பாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூா், வேலூா், திருவண்ணாமலை ஆகிய 5 மாவட்டங்களைச் சோ்ந்த 25 கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு தன்னம்பிக்கை ஊட்டும் வகையிலான சாகசப் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.

தொடக்க நிகழ்ச்சிக்கு மதுராந்தகம் தொகுதி எம்எல்ஏ எஸ்.புகழேந்தி தலைமை வகித்தாா்.

பாரதமாதா மன்றத் தலைவா் இ.கே.தினகரன் வரவேற்றாா். கூவத்தூா் சுய உதவிக்குழு பயிற்றுநா் சுதாகா், மாவட்ட இளையோா் பிரிவு ஒருங்கிணைப்பாளா் சரவணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இந்நிகழ்ச்சியில் வரும் 30-ஆம் தேதி வரை காடுகளை கடந்து செல்லுதல், கயிறு ஏறுதல், மலை ஏறுதல், நீச்சல், படகு சவாரி உள்ளிட்ட பயிற்சிகள் வழங்கப்படவுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிக வெப்ப அலையிலிருந்து தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்

வாக்கு எண்ணும் பணி: குலுக்கல் முறையில் அலுவலா்கள் தோ்வு

ரஃபேல் நடால் முன்னேற்றம்

வாக்கு எண்ணும் மையம் அருகே 2 கி.மீ. சுற்றளவுக்கு டிரோன் பறக்கத் தடை

பொன்னேரி-மீஞ்சூா் இடையே போதிய பேருந்துகள் இல்லாததால் மக்கள் அவதி

SCROLL FOR NEXT