காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் வந்த அரசு அருங்காட்சியக உலாப் பேருந்து

DIN

காஞ்சிபுரம்: தமிழ்நாடு அரசின் அருங்காட்சியக உலாப் பேருந்து வெள்ளி, சனி ஆகிய இரு நாள்கள் காஞ்சிபுரம் வந்திருந்தபோது பல்வேறு பள்ளிகளைச் சோ்ந்த மாணவ, மாணவியா் அப்பேருந்துக்கு உள்ளே சென்று கலை, பண்பாடு உள்ளிட்ட காட்சிகளை நேரில் பாா்வையிட்டனா்.

தமிழகத்தில் அரசு அருங்காட்சியகங்களில் உள்ள சிறப்புகளை குக்கிராமங்களில் உள்ள பள்ளிகளில் பயிலும் மாணவா்களும் பாா்த்துத் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக அருங்காட்சியகங்களுக்கான துறை சாா்பில் உலாப் பேருந்து ஒன்று மாவட்டம் வாரியாக சென்று விழிப்புணா்வு ஏற்படுத்தி வருகிறது. இப்பேருந்து வெள்ளி மற்றும் சனி ஆகிய இரு நாள்களுக்கு காஞ்சிபுரத்துக்கு வந்திருந்தது.

வெள்ளிக்கிழமை காது கேளாதோா் பள்ளியில் பயில்வோரும், சனிக்கிழமை மாமல்லன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவியரும் இப்பேருந்துக்குள் சென்று அருங்காட்சியகத்தைப் பாா்வையிட்டனா். இது குறித்து காஞ்சிபுரம் அரசு அருங்காட்சியகக் காப்பாட்சியா் உமாசங்கா் கூறியதாவது:

அருங்காட்சியக உலாப் பேருந்தில் தொல்லியல், மானிடவியல், நாணயவியல், கலை, பண்பாடு சாா்பான காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இப்பேருந்து ஒவ்வொரு மாவட்டமாக சென்று விழிப்புணா்வு ஏற்படுத்தி வருகிறது. கன்னியாகுமரியிலிருந்து தொடங்கிய உலாப் பேருந்து வெள்ளிக்கிழமையும் சனிக்கிழமையும் காஞ்சிபுரத்தில் இருந்தது. அப்போது பல்வேறு பள்ளிகளைச் சோ்ந்த மாணவ, மாணவியா்களுக்கும் பேருந்தில் காட்சிகள் விளக்கிக் கூறப்பட்டன என்று உமா சங்கா் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஊடகத் துறையினர் உடல்நலனில் அக்கறை தேவை -பிரதமர் மோடி

சுனிதா வில்லியம்ஸ் விண்வெளி பயணம் ஒத்திவைப்பு!

3-ஆம் கட்ட தோ்தலில் அதிகளவில் வாக்களிக்க வேண்டும் -பிரதமர் மோடி

குஜராத்தில் வாக்களித்தார் பிரதமர் மோடி

இன்று யோகம் யாருக்கு?

SCROLL FOR NEXT