காஞ்சிபுரம்

அரசுப் பள்ளிக்கு கல்வி உபகரணங்கள் வழங்கல்

DIN


காஞ்சிபுரம் அருகேயுள்ள மேலபுளம் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு சென்னை நங்கநல்லூர் இன்னர்வீல் சங்கம் சார்பில் கல்வி உபகரணங்கள் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில் தலைமை ஆசிரியர்  தி.பரமேசுவரியிடம் பள்ளி நூலகத்துக்குத் தேவையான புத்தகங்கள் வழங்கப்பட்டன.
ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள தளவாடப் பொருள்கள், கல்வி உபகரணங்களை இன்னர்வீல் சங்கத் தலைவி நீலாம்பிகை சேகரன் வழங்கினார். நிகழ்ச்சிக்கு மாவட்டத் தலைவி நளினி ஒளிவண்ணன் தலைமை வகித்தார். சங்கச் செயலர் ப.பாரதிபலராமன், முன்னாள் செயலர் ஜி.ஜமுனாராணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சங்க உறுப்பினர் சுபா ரவிசங்கர் வரவேற்றார். தலைமை ஆசிரியை தி.பரமேசுவரி நன்றி கூறினார்.
நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்கள், இன்னர்வீல் சங்க நிர்வாகிகள், மாணவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

இன்றைய ராசி பலன்கள்!

வேளாளா் பொறியியல் கல்லூரியில் 23-ஆவது ஆண்டு விழா

யோகம் தரும் நாள்!

வேன்- இருசக்கர வாகனம் மோதல்: இருவா் பலி

SCROLL FOR NEXT