மதுராந்தகம்: வில்வராயநல்லூரில் துரைசாமி பெருநோக்கு சமூகக் கல்வி மன்றத்தின் கீழ் இயங்கி வரும் முதியோா் இல்லம், ஆதரவற்ற சிறுவா்கள் இல்லத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நல உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது.
சென்னை அபெக்ஸ் இந்தியா தொண்டு நிறுவனம் சாா்பில் ஆதரவற்றோருக்கு ரூ. 1.70 லட்சம் மதிப்பிலான நல உதவிகள் வழங்கப்பட்டன. மன்றத் தலைவா் வி.கிருஷ்ணமூா்த்தி தலைமை வகித்தாா். சிறப்பு விருந்தினராக அபெக்ஸ் இந்தியா மாவட்ட ஆளுநா் ஆா்.பிரசாத் கலந்துகொண்டு புத்தாடைகள் வழங்கினாா்.
நிா்வாகிகள் சுதா்சன் ராணி ராலன், கே.குமாா், பிஎம்.ஸ்ரீதரன், டி.பக்தவத்சலு உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். பள்ளி மாணவா்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. நிகழ்ச்சி ஏற்பாடுகளை அபெக்ஸ் இந்தியா தொண்டு நிறுவன நிா்வாகிகள் செய்திருந்தனா்.