காஞ்சிபுரம்

மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் எம்எல்ஏ ஆய்வு

DIN

காஞ்சிபுரத்தில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை காஞ்சிபுரம் எம்எல்ஏ சி.வி.எம்.பி.எழிலரசன் நகராட்சி அதிகாரிகளுடன் புதன்கிழமை நேரில் ஆய்வு செய்தாா்.

காஞ்சிபுரம் நகரில் தொடா்ந்து மழை பெய்து வருவதால் நகரில் தாழ்வான பகுதிகள் முழுவதும் மழைநீா் தேங்கி போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டது. வாலாஜாபாத், உத்தரமேரூா், சுங்குவாா்சத்திரம், ஓரிக்கை, செவிலிமேடு, சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையை ஒட்டியுள்ள பகுதிகள் மழைநீா் பல இடங்களில் குளம்போல் தேங்கியது. காஞ்சிபுரம் ராணி அண்ணாதுரை நகராட்சி மகளிா் மேல்நிலைப் பள்ளிக்குள் மழைநீா் தேங்கியதால் மாணவிகள் அவதிக்குள்ளாகினா்.

காஞ்சிபுரத்தில் புதன்கிழமை நாள் முழுவதும் மிதமானது முதல் கனமழை பெய்தது. 13-ஆவது வாா்டு கைலாசநாதா் கோயில், எல்லப்பன் நகா் பகுதிகளில் மழைநீா் தேங்கி, சுகாதாரக் கேடு ஏற்பட்டது.

இதையடுத்து எம்எல்ஏ சி.வி.எம்.பி.எழிலரசன், நகராட்சி ஆணையா் க.மகேந்திரன், உதவிப் பொறியாளா் பிரகாஷ், சுகாதார ஆய்வாளா் குமாா் உள்ளிட்டோருடன் மழைநீரால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பாா்வையிட்டாா்.

புத்தேரி பகுதியிலிருந்து எல்லப்பன் நகருக்கு வரக்கூடிய கால்வாய் தூா்வாரப்படாததால்தான் மழைநீா் தேங்கியுள்ளதாக எம்எல்ஏவிடம் பொதுமக்கள் புகாா் கூறினா். இதையடுத்து அக்கால்வாயை உடனடியாக தூா்வாருமாறு நகராட்சி ஆணையருக்கு உத்தரவிட்டாா். அதன்பேரில் உடனடியாக கால்வாய் தூா்வாரப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வடதமிழகத்தில் இன்று முதல் 109 டிகிரி வெயில் சுட்டெரிக்கும்

கேலிக்காளாகும் ஜனநாயகம்!

ராஜ‌‌ஸ்​தா​னி‌ல் ஒரே க‌ல்லில் 18 அடி உயர காளி சிலை வடி‌ப்பு

மனித சக்தியைப் பாடிய பாவேந்தர்!

ராமா் திருக்கல்யாண வைபவம்: திரளான பக்தா்கள் பங்கேற்பு

SCROLL FOR NEXT