காஞ்சிபுரம்

செம்பரம்பாக்கம் ஏரி தூர்வாரும் பணி: ஆட்சியர் தொடக்கி வைப்பு

DIN


சென்னைக்கு குடிநீர் வழங்கும்  முக்கிய  ஏரிகளுள் ஒன்றான  செம்பரம்பாக்கம்  ஏரியைத்  தூர்வாரும் பணியை காஞ்சிபுரம்   மாவட்ட  ஆட்சியர்  பா.பொன்னையா  புதன்கிழமை  தொடக்கி வைத்தார். 
செம்பரம்பாக்கம் ஏரியைத்  தூர்வாரும்  பணியை  கொடியசைத்துத் தொடக்கி  வைத்த  ஆட்சியர் செய்தியாளர்களிடம் கூறியது:
சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கியமான ஏரிகளுள் ஒன்று செம்பரம்பாக்கம் ஏரியாகும். இதனைத் தூர்வாரி ஏரியின் கொள்ளளவை உயர்த்த வேண்டும் என பலரும் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இந்த ஏரியைத் தூர்வார தமிழக அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. ஏரியின் மொத்த நீர்ப்பரப்பு 2,316 ஹெக்டேர். இதில் 151.80 லட்சம் கன மீட்டருக்கு ஏரி தூர்வாரப்படவுள்ளது.  சுமார் 25.30 லட்சம் லோடு மண், லாரிகள் மூலம் எடுத்துச் செல்லப்படவுள்ளது. ஏரியின் மொத்த நீர்க் கொள்ளளவு 3,645 மில்லியன் கன அடியாகும். இதில், 536 மில்லியன் கன அடி வரை தூர்ந்து போய் உள்ளது. இதனை மீட்டெடுக்கும் வகையில் ஏரியில் தூர்வாரும் பணியைத் தொடக்கி வைத்துள்ளோம் என்றார். இந்த நிகழ்வில், பொதுப்பணித்துறை செயற் பொறியாளர் பழனிசாமி, பொறியாளர்கள் ரமேஷ், சத்யநாராயணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3-ஆம் கட்ட தோ்தல்: படகில் சென்று ஜனநாயகக் கடமையாற்றிய வாக்காளர்கள்

தலைசிறந்த மூன்றாண்டு! தலைநிமிர்ந்த தமிழ்நாடு - முதல்வர் ஸ்டாலின்

ஊடகத் துறையினர் உடல்நலனில் அக்கறை தேவை -பிரதமர் மோடி

சுனிதா வில்லியம்ஸ் விண்வெளி பயணம் ஒத்திவைப்பு!

3-ஆம் கட்ட தோ்தலில் அதிகளவில் வாக்களிக்க வேண்டும் -பிரதமர் மோடி

SCROLL FOR NEXT