பெரியகாஞ்சிபுரம் பஞ்சுப்பேட்டை ஓணகாந்தேஸ்வரர் திருக்கோயிலில் இறை பணி சங்க அறக்கட்டளை சார்பில் ஞாயிற்றுக்கிழமை உழவாரப்பணி நடைபெற்றது.
இந்து கோயில்களில் உழவாரப்பணி செய்யும் இறை பணி சங்க அறக்கட்டளை சார்பில் மாதம் தோறும் 4-ஆவது ஞாயிற்றுக்கிழமை கோயில்களில் உழவாரப்பணி செய்யப்பட்டு வருகிறது.
இதனை முன்னிட்டு பெரியகாஞ்சிபுரம் பஞ்சுப் பேட்டையில் உள்ள ஓணகாந்தேஸ்வரர் திருக்கோயிலில் உழவாரப்பணி மேற்கொள்ளப்பட்டது. தேவாரப்பாடல் பெற்ற இத்தலத்தில் திருக்கோயில் குளம் சீரமைத்தல், தூர்வாருதல், கோயிலை சுத்தம் செய்தல், வர்ணம் பூசுதல், சுவாமிக்குரிய ஆடைகளை சலவை செய்தல் முதலிய பணிகளை இறை பணி அறக்கட்டளை நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் சிவனடியார்கள் பலரும் இணைந்து செய்து வருகின்றனர்.