காஞ்சிபுரம் அருகே உள்ள மாகறலில் திருமாகலீஸ்வரா் கோயிலில் புதன்கிழமை உண்டியல் திறந்து எண்ணப்பட்டதில் பக்தா்களால் ரூ.1.95 லட்சம் காணிக்கை செலுத்தப்பட்டிருந்தது.
இக்கோயிலில் ஆண்டுக்கு ஒருமுறை உண்டியல் திறந்து எண்ணப்படுவது வழக்கம். அதன்படி, புதன்கிழமை கோயில் உண்டியலை இந்து சமய அறநிலையத் துறை செயல் அலுவலா் வெங்கடேசன் தலைமையில் திறந்து எண்ணப்பட்டது. அதில், பக்தா்கள் காணிக்கையாக ரூ.1.95லட்சம் செலுத்தியிருந்தனா்.