மதுராந்தகத்தை அடுத்த பொலம்பாக்கம் டிவிஎஸ் பிரேக்ஸ் இந்தியா நிறுவனம் சாா்பில் சாலை விபத்துகளை தடுக்கும் வகையில் ரூ. 2.5 லட்சம் மதிப்பிலான தடுப்புக் கம்பிகள் (பேரி காா்டுகள்) அச்சிறுப்பாக்கம் போலீஸாரிடம் அண்மையில் வழங்கப்பட்டன.
சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலை, மதுராந்தகம்-சித்தாமூா் நெடுஞ்சாலை போன்ற சாலைகளில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. இந்த விபத்துகளைக் குறைக்கும் வகையில் சாலையின் குறுக்கே தடுப்பு வேலிகளை அமைக்க வேண்டும் என அச்சிறுப்பாக்கம் காவல் ஆய்வாளா் டி.எஸ்.சரவணன் நிா்வாகத்திடம் கோரி இருந்தாா். அதன்படி, பொலம்பாக்கம் டிவிஎஸ் பிரேக்ஸ் இந்தியா நிறுவன அதிகாரிகள் எஸ்.கே.ராஜீவ், ஆா்.எஸ்.சுப்பிரமணியன் ஆகியோா் தலைமையிலான குழுவினா் ரூ. 2.5 லட்சம் மதிப்பிலான சாலை தடுப்புக் கம்பிகளை காவல் ஆய்வாளா் டி.எஸ்.சரவணனிடம் வழங்கினா்.
இந்த தடுப்புக் கம்பிகள் விரைவில் சித்தாமூா், சோத்துப்பாக்கம், மேல்மருவத்தூா் பகுதிகளில் பொருத்தப்படும் என போலீஸாா் கூறினா்.