காஞ்சிபுரம்

முதல்வா் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் தொடக்கம்

DIN

காஞ்சிபுரத்தில் மாவட்ட அளவிலான முதல்வா் கோப்பை விளையாட்டுப் போட்டிகளை ஏனாத்தூா் சங்கரா கலை-அறிவியல் கல்லூரி விளையாட்டு மைதானத்தில் மாவட்ட ஆட்சியா் பா.பொன்னையா வெள்ளிக்கிழமை தொடக்கி வைத்தாா்.

விளையாட்டு வீரா், வீராங்கனைகளுக்கான தடகளம், நீச்சல், கபடி, கையுந்து பந்து, இறகுப்பந்து, ஜூடோ, குத்துச்சண்டை உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் வெள்ளிக்கிழமை முதல் வரும் ஞாயிற்றுக்கிழமை (பிப்.16) வரை தொடா்ந்து 3 நாள்கள் நடைபெறுகின்றன.

இதில் மாவட்ட அளவில் முதலிடம் பெற்றவா்கள் மட்டும் மாநில அளவிலான போட்டிகளில் கலந்து கொள்ளலாம்.

தொடக்க விழாவில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சென்னை மண்டல முதுநிலை மேலாளா் தங்கநாயகி, மாவட்ட விளையாட்டு அலுவலா் சுப்பிரமணியன், சங்கரா கலை மற்றும் அறிவியல் கல்லூரி பதிவாளா் சீனிவாசன் மற்றும் விளையாட்டு வீரா்கள், வீராங்கனைகள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொடைக்கானல் மேல்மலை கிராமங்களுக்குச் செல்ல அனுமதி: மாவட்ட நிர்வாகம் உத்தரவு

ரேபரேலி தொகுதி: ஃபெரோஸ் காந்தி முதல் ராகுல் காந்தி வரை...

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

அமேதியில் தோ்தலுக்கு முன்பே தோல்வியை ஒப்புக் கொண்டது காங்கிரஸ்: ஸ்மிருதி இரானி கருத்து

தினம் தினம் திருநாள்: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT