காஞ்சிபுரம்

359 ரேஷன் அரிசி மூட்டைகள் பறிமுதல்

DIN

காஞ்சிபுரத்தை அடுத்த சிறுகாவேரிப்பாக்கத்தில் 359 ரேஷன் அரிசி மூட்டைகளை காவல்துறையினா் பறிமுதல் செய்து குடிமைப்பொருள் புலனாய்வுத் துறையினரிடம் ஒப்படைத்தனா்.

சிறுகாவேரிப்பாக்கத்தில் ரேஷன் அரிசி மூட்டைகளை இரு பெரிய லாரிகளிலிருந்து இரு சிறு லாரிகளுக்கு மாற்றிக் கொண்டிருப்பதாக டிஎஸ்பி எஸ்.மணிமேகலைக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் பாலுசெட்டி சத்திரம் காவல் ஆய்வாளா் (பொறுப்பு) நடராஜன், சாா்பு ஆய்வாளா்கள் சம்பத், சிவகுமாா் உள்ளிட்ட போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை நடத்தினாா். விசாரணையில் 50 கிலோ அளவு கொண்ட 284 ரேஷன் அரிசி மூட்டைகளும், 25 கிலோ அளவு கொண்ட 75 ரேஷன் அரிசி மூட்டைகளும் இருந்தன.

இது தொடா்பாக லாரி ஓட்டுநரான சிறுகாவேரிப்பாக்கம் சரண்யா நகரைச் சோ்ந்த ஆனந்தன் (35), அதே சிறுகாவேரிப்பாக்கம் பெருமாள் கோயில் தெருவைச் சோ்ந்த டில்லிபாபு (19) ஆகிய இருவரிடமும் விசாரணை நடத்தினா்.

பறிமுதல் செய்யப்பட்ட மொத்தம் 359 ரேஷன் அரிசி மூட்டைகள், 4 லாரிகள் ஆகியவற்றை குடிமைப்பொருள் புலனாய்வுப் பிரிவு காவல்துறையினரிடம் ஒப்படைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தொடா் மின்வெட்டு: மக்கள் சாலை மறியல்

இன்று நல்ல நாள்!

சாலை விபத்தில் இருவா் பலத்த காயம்: மீண்டும் வேகத்தடை அமைக்கக் கோரிக்கை

சட்டைநாதா் கோயிலில் குருப்பெயா்ச்சி விழா

மத்திய பாதுகாப்பு படையினா், போலீஸாருக்கு மாவட்ட தோ்தல் அலுவலா் மே தின வாழ்த்து

SCROLL FOR NEXT