காஞ்சிபுரம்

காஞ்சிபுரத்தில் முகக்கவசம் அணியாமல் வெளியே வந்தால் ரூ.100 அபராதம்

DIN

காஞ்சிபுரத்தில் முகக்கவசம் அணியாமல் வெளியே வருபவர்களிடம் ரூ.100 அபராதம் வசூலிக்கப்படுகிறது. 

காஞ்சிபுரம் மாவட்டத்தில் கரோனா நோய்த்தொற்று அதிகமாக பரவி வருவதால் நகரில் சின்ன காஞ்சிபுரம் சன்னதி தெரு, ரெங்கசாமி குலம், தேரடி, மூங்கில் மண்டப சந்திப்பு, ரெட்டை மண்டபம் உள்பட 14 இடங்களில் நகராட்சி சுகாதார அலுவலர்கள் தலைமையில் வாகன ஓட்டிகள் பாதசாரிகள் ஆகியோர் முகக்கவசம் அணிந்து வருகிறார்களா என சோதிக்கப்பட்டு வருகின்றனர்.

முகக்கவசம் அணியாமல் வருபவர்களிடம் உடனடி அபராதத் தொகையாக ரூபாய் 100 வசூலிக்கப்படுகிறது. இதுவரை 1500 பேரிடம் ரூபாய் 100 வீதம் அபராதம் வசூலிக்கப்பட்டது. மொத்த அபராதத் தொகை ரூபாய் 15,000 வசூலிக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் நகரில் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்படுமென நகராட்சி ஆணையாளர் ரா. மகேஸ்வரி உத்தரவிட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டி20 போட்டிகள் எப்போதும் பேட்ஸ்மேன்களுக்கானது: பாட் கம்மின்ஸ்

மே.வங்கம்: 25,000 ஆசிரியர் பணி நியமனங்கள் ரத்து - இடைக்காலத் தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

பைத்தான் குழுவை பணிநீக்கம் செய்த கூகுள்! மென்பொருள் துறையில் அதிர்ச்சி!!

ஆண்டுதோறும் பாடப்புத்தகங்களை மதிப்பாய்வு செய்ய என்சிஇஆர்டிக்கு கல்வி அமைச்சகம் அறிவுறுத்தல்!

நடிகர் பிரகாஷ்ராஜுக்கு அம்பேத்கர் சுடர் விருது அறிவித்த திருமாவளவன்! | செய்திகள்: சிலவரிகளில் | 29.04.2024

SCROLL FOR NEXT