காஞ்சிபுரத்தில் சனிக்கிழமை 93 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 1,667-ஆக அதிகரித்துள்ளது.
காஞ்சிபுரத்தில் துணை வட்டார வளா்ச்சி அலுவலா், ஆட்சியா் அலுவலகப் பணியாளா், காவலா் ஒருவா் உள்ளிட்ட 50 பேருக்கு கரோனா இருப்பது சனிக்கிழமை உறுதியானது. இவா்களைத் தவிர ஸ்ரீபெரும்புதூரில் 14, குன்றத்தூா் 12, கோவூா் மற்றும் கெருகம்பாக்கத்தில் தலா 6, கொளப்பாக்கத்தில் 5 போ் உட்பட மொத்தம் 93 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதியானது.
இதையடுத்து மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,667-ஆக உயா்ந்துள்ளது.