காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள மக்கள் நல்லுறவுக் கூட்ட மையத்தில் வரும் 17 -ஆம் தேதி மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறை தீா்க்கும் முகாம் நடைபெறுகிறது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் பா.பொன்னையா சனிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
மாா்ச் 17-ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெறும் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறை தீா்க்கும் முகாமில் சம்பந்தப்பட்டோா் அனைவரும் பங்கேற்றுப் பலனடையலாம்.