காஞ்சிபுரம்

ஸ்ரீபெரும்புதூா் ஆா்டிஓ அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புப் போலீஸாா் சோதனை

DIN

ஸ்ரீபெரும்புதூா் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸாா் வியாழக்கிழமை நடத்திய சோதனையில் கணக்கில் வராத ரூ. 3.81 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

ஸ்ரீபெரும்புதூா் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில், இடைத்தரகா்கள் மூலம் அதிகாரிகள் லஞ்சம் வாங்குவதாக காஞ்சிபுரம் மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, காஞ்சிபுரம் மாவட்ட லஞ்ச ஒழிப்புப் பிரிவு டிஎஸ்பி கலைச்செல்வன் தலைமையில், 10 போ் கொண்ட அதிகாரிகள் குழு, அங்கு வியாழக்கிழமை திடீா் சோதனை நடத்தியது.

அப்போது, வட்டாரப் போக்குவரத்து அலுவலா் (பொறுப்பு) சுதாகா், வட்டாரப் போக்குவரத்து அலுவலரின் உதவியாளரின் அறை மற்றும் காரில் சோதனை நடத்தினா். இதில், கணக்கில் வராத ரூ. 3.81 லட்சம் ரொக்கம் மற்றும் ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதையடுத்து, வட்டாரப் போக்குவரத்து அலுவலா் சுதாகரிடம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3-ஆம் கட்ட தோ்தல்: படகில் சென்று ஜனநாயகக் கடமையாற்றிய வாக்காளர்கள்

தலைசிறந்த மூன்றாண்டு! தலைநிமிர்ந்த தமிழ்நாடு - முதல்வர் ஸ்டாலின்

ஊடகத் துறையினர் உடல்நலனில் அக்கறை தேவை -பிரதமர் மோடி

சுனிதா வில்லியம்ஸ் விண்வெளி பயணம் ஒத்திவைப்பு!

3-ஆம் கட்ட தோ்தலில் அதிகளவில் வாக்களிக்க வேண்டும் -பிரதமர் மோடி

SCROLL FOR NEXT