காஞ்சிபுரம்

நிரந்தர வெள்ளத் தடுப்பில் காஞ்சிபுரம் முன்னோடி

மழை, வெள்ளப்பெருக்கு காரணமாக, மக்களுக்கு எந்தவிதப் பாதிப்பும் ஏற்படாமல் இருக்க நாட்டிலேயே முதல் முறையாக ஒருங்கிணைந்த காஞ்சிபுரம் மாவட்டத்தில் ரூ.338 கோடியில் நிரந்தர வெள்ளத்

சி.வ.சு. ஜெகஜோதி

மழை, வெள்ளப்பெருக்கு காரணமாக, மக்களுக்கு எந்தவிதப் பாதிப்பும் ஏற்படாமல் இருக்க நாட்டிலேயே முதல் முறையாக ஒருங்கிணைந்த காஞ்சிபுரம் மாவட்டத்தில் ரூ.338 கோடியில் நிரந்தர வெள்ளத் தடுப்புத் திட்டத்தை பொதுப்பணித் துறை செயல்படுத்தியுள்ளது.
தமிழகத்திலேயே அதிகமான ஏரிகளும், கண்மாய்களும் நிறைந்தது ஒருங்கிணைந்த காஞ்சிபுரம் மாவட்டம். இதனை ஏரி மாவட்டம் என்றும் அழைப்பதுண்டு. 
சென்னையை உள்ளடக்கிய ஒருங்கிணைந்த காஞ்சிபுரம் மாவட்டத்தில் சராசரி மழையை விட கூடுதலாக மழைப்பொழிவு இருந்தால், ஏரிகளும், கண்மாய்களும் உடையாமல் தவிர்க்க பொதுப்பணித் துறை சார்பில் நிரந்தர வெள்ளத் தடுப்புத் திட்டம் இந்தியாவிலேயே முதல் முதலாக உருவாக்கப்பட்டுள்ளது.
"பருவகால மாற்றமே அதிக மழைப் பொழிவுக்கு காரணம்':
கடந்த 2015-ஆம் ஆண்டு பெய்த மழையானது 100 ஆண்டுகளுக்குப் பிறகு பெய்த மழையாகும்.  2016-ஆம் ஆண்டு வறட்சி ஏற்பட்டது. 2017-இல் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதற்கு பருவகால மாற்றங்களே காரணமாகும். சராசரியாக நவம்பர், டிசம்பர் மாதங்களில் மழையளவு அதிகபட்சம் 150 மி.மீ. ஆகத்தான் இருந்துள்ளது. ஆனால், கடந்த 13.11.2015- ஆம் தேதி ஒரே நாளில் மட்டும் 342 மி.மீ. மழை கொட்டித் தீர்த்தது.  
ஒருங்கிணைந்த காஞ்சிபுரம் மாவட்டத்தைப் பொருத்தவரை ஓராண்டு சராசரி மழையளவு 942 மி.மீ. மட்டுமே. ஆனால், கடந்த 2015-ஆம்  ஆண்டில் நவம்பர்,
டிசம்பர் இரு மாதங்களில் மட்டுமே 1,808.60 மி.மீ. மழை பொழிந்துள்ளது. 
கனமழையால் முதலில் ஊத்துக்காடு ஏரி உடைந்தது. அதையடுத்து புத்தகரம், கள்ளிப்பட்டு, பழையசீவரம், கடம்பூர், ஊரப்பாக்கம், மண்ணிவாக்கம், நந்திவரம்,
செட்டிபுண்ணியம், தென்மேல்பாக்கம் உள்பட 924 ஏரிகளில் 1,513 இடங்களில் உடைப்புகள் ஏற்பட்டன. கனமழையால் தாம்பரம், குரோம்பேட்டை, பல்லாவரம், சிட்லப்பாக்கம், போரூர், அஸ்தினாபுரம், முடிச்சூர், வரதராஜபுரம், நந்திவரம், நாராயணபுரம், பள்ளிக்கரணை உள்பட தென்சென்னையின் பல்வேறு பகுதிகள், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களிலும் அதிகமான பாதிப்புகள் ஏற்பட்டன.
கடந்த 2017-ஆம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின்போது தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி வெள்ளச்சேதப் பகுதிகளைப் பார்வையிட்டு, இதுபோன்ற வெள்ளப் பாதிப்பு எதிர்காலத்தில் ஏற்படாமல் தடுக்க நிரந்தரத் தீர்வு  காணுமாறு அதிகாரிகளுக்கு  உத்தரவிட்டார். 
இதன் எதிரொலியாக நாட்டிலேயே முதல் முறையாக ஒருங்கிணைந்த காஞ்சிபுரம் மாவட்டத்தில் ரூ.338 கோடியில் நிரந்தர வெள்ளத் தடுப்புத் திட்டம்
செயல்படுத்தப்பட்டுள்ளது. 
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியரது  அறிவுரையின்படி, நிரந்தர வெள்ளத் தடுப்புப் பணிகளை பல கோடிகள் மதிப்பில் செய்திருப்பதாக பொதுப்பணித் துறை
செயற்பொறியாளர் ஆர்.ரமேஷ் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அமமுகவிற்கான தொகுதி உடன்படிக்கை பாஜக மூலம் நடைபெறும்: டிடிவி தினகரன்

டேவிட் மில்லர், டெவால்ட் பிரேவிஸ் அதிரடி: இந்தியாவுக்கு 188 ரன்கள் இலக்கு!

சென்னையில் முதல்வர் மு. க. ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச்செயலர் கே. சி. வேணுகோபால் ஆலோசனை!

பாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல் செய்ய 90 கோடி டாலர் ஒப்பந்தம்: சோமாலியா பேச்சுவார்த்தை

இணைந்து செயல்படுவதுதான் முன்னேற்றத்துக்கு உறுதுணை: சி.பி. ராதாகிருஷ்ணன்

SCROLL FOR NEXT