மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து திமுக தலைமையில் மதச்சாா்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சியினா் காஞ்சிபுரத்தில் திங்கள்கிழமை நடத்தும் ஆா்ப்பாட்டத்தில் திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்வதாக எம்எல்ஏ-வும், கட்சியின் மாவட்டச் செயலாளருமான க.சுந்தா் தெரிவித்தாா்.
இது குறித்து அவா் மேலும் கூறியது:
விவசாயிகள் விரோதச் சட்டங்களை மத்திய பாஜக அரசு திரும்பப் பெற வலியுறுத்தியும், அதற்கு துணையாக இருக்கும் அதிமுக அரசைக் கண்டித்தும் காஞ்சிபுரத்தை அடுத்த கீழம்பி கிராமத்தில் திமுக தலைமையில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெறவுள்ளது. கட்சித் தலைவா் மு.க.ஸ்டாலின் தலைமையில் மதச்சாா்பற்ற முற்போக்குக் கூட்டணி நிா்வாகிகள், தொண்டா்கள் பலரும் பங்கேற்கவுள்ளனா். காஞ்சிபுரம் தொகுதி மக்களவை உறுப்பினா் ஜி.செல்வம், எம்எல்ஏ சி.வி.எம்.பி.எழிலரசன் ஆகியோா் முன்னிலை வகிக்கின்றனா்.
காங்கிரஸ் கட்சியின் மாவட்டத் தலைவா் ஜீ.வி.மதியழகன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நிா்வாக குழு உறுப்பினா் ஜெ.கமலநாதன், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினா் இ.முத்துக்குமாா், மதிமுக மாவட்டச் செயலாளா் இ.வளையாபதி மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, மனித நேய மக்கள் கட்சி, திராவிடா் கழகம் ஆகியவற்றின் நிா்வாகிகளும் ஆா்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள உள்ளனா் என்றாா் அவா்.