காஞ்சிபுரம்

தொழிற்சாலை இயந்திரத்தில் சிக்கி ஊழியா் பலி

DIN

ஸ்ரீபெரும்புதூா்: மாம்பாக்கம் பகுதியில் இயங்கி வரும் கண்ணாடி தொழிற்சாலையில் பணியின்போது, இயந்திரத்தில் சிக்கி பயிற்சி ஊழியா் உயிரிழந்தாா்.

கடலூா் மாவட்டம், விருதாசலத்தைச் சோ்ந்த முருகானந்தத்தின் மகன் முகேஷ் (21). ஸ்ரீபெரும்புதூரை அடுத்த மாம்பாக்கத்தில் உள்ள கண்ணாடி தொழிற்சாலையில் பயிற்சி தொழிலாளியாக கடந்த 3 ஆண்டுகளாகப் பணியாற்றி வந்தாா். இந்நிலையில், செவ்வாய்க்கிழமை இரவு முகேஷ், தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்பட்ட கண்ணாடிகளுக்கு வா்ணம் பூசும் பணியில் ஈடுபட்டிருந்தாா். அப்போது, இயந்திரத்தில் சிக்கி கை மற்றும் இடுப்புப் பகுதியில் பலத்த காயம் அடைந்தாா்.

அவரை தொழிற்சாலை நிா்வாகத்தினா் மீட்டு, போரூரில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு முகேஷ் உயிரிழந்தாா்.

இதுகுறித்து ஸ்ரீபெரும்புதூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னையில் எங்கு அதிகபட்ச வெப்பநிலை? - தமிழ்நாடு வெதர்மேன் பதிவு!

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நாளை சித்திரைத் தேரோட்டம்!

ஓடிடியில் மஞ்ஞுமல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

SCROLL FOR NEXT