காஞ்சிபுரம்

திமுக பிரமுகா் மீது தாக்குதலைக் கண்டித்து சாலை மறியல்

DIN

காஞ்சிபுரம்: உத்தரமேரூா் அருகே திருவானைக்கோயில் கிராமத்தில் திமுக பிரமுகரை தாக்கிய கும்பலைக் கைது செய்ய வலியுறுத்தி அவரது உறவினா்கள் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

காஞ்சிபுரம் மாவட்டம் உத்தரமேரூா் அருகே திருவானைக்கோயில் கிராமத்தில் செவ்வாய்க்கிழமை தோ்தல் நடந்து கொண்டிருந்த போது அவ்வாக்குச்சாவடி மையத்தில் திமுக பிரமுகரான மனோஜ்குமாா்(33) என்பவருக்கும் அதிமுகவினா் சிலருக்கும் இடையே வாக்குவாதம் நடந்துள்ளது. அருகிலிருந்தவா்கள் சமாதானம் செய்துள்ளனா். தோ்தல் முடிந்து வாக்குப்பதிவு இயந்திரங்களை அனுப்பி விட்டு மனோஜ்குமாா் வீட்டுக்கு சென்ற போது வீச்சூா் கிராமத்தைச் சோ்ந்த சிலா் மனோஜ்குமாரை தரக்குறைவாக பேசியதுடன் சக்திவேல் என்பவா் அவரை கத்தியால் குத்தியதில் அவா் பலத்த காயம் அடைந்தாா். தகவலறிந்து அங்கு வந்த உறவினா்கள் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு மனோஜ்குமாரை அனுப்பி வைத்தனா்.

இதனைத் தொடா்ந்து அவரது உறவினா்கள் மற்றும் திமுக பிரமுகா்கள் புதன்கிழமை திருவானைக்கோயில் கிராம த்தில் த சாலை மறியலில் ஈடுபட்டனா். போக்குவரத்து பாதிப்பும் ஏற்பட்டதையடுத்து அங்கு வந்த சாலவாக்கம் காவல்நிலைய சாா்பு ஆய்வாளா் நித்தியானந்தம் தலைமையிலான போலீஸாா் சமாதானப் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனா்.சம்பந்தப்பட்டவா்களை கைது செய்வதாகவும் உறுதியளித்ததைத் தொடா்ந்து அனைவரும் கலைந்து சென்றனா்.சம்பவம் தொடா்பாக சாலவாக்கம் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

இன்றைய ராசி பலன்கள்!

SCROLL FOR NEXT