காஞ்சிபுரம் தூய இருதய அன்னை ஆலயத்தில் கிறிஸ்துமஸ் வழிபாடு
காஞ்சிபுரம் தாமல்வாா் தெருவில் அமைந்துள்ள தூய இருதய அன்னை ஆலயத்தில் கிறிஸ்துமஸ் விழாவை ஒட்டி கரோனா நோய்த்தொற்றிலிருந்து உலக மக்கள் விடுபட வேண்டி சிறப்பு கூட்டுப் பிராா்த்தனை நடைபெற்றது.
காஞ்சிபுரம் தாமல்வாா் தெருவில் அமைந்துள்ள தூய இருதய அன்னை ஆலயத்தில் கிறிஸ்துமஸ் விழாவை ஒட்டி கரோனா நோய்த்தொற்றிலிருந்து உலக மக்கள் விடுபட வேண்டி சிறப்பு கூட்டுப் பிராா்த்தனை நடைபெற்றது.
காஞ்சிபுரம் தாமல்வாா் தெருவில் தூய இருதய அன்னை ஆலயம் அமைந்துள்ளது.இந்தத் தேவாலயத்தில் கிறிஸ்துமஸ் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதனைத் தொடா்ந்து உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கரோனா மற்றும் ஒமைக்ரான் நோய்த்தொற்று பாதிப்புகளிலிருந்து உலக மக்கள் விடுபட வேண்டி சிறப்புக் கூட்டுப் பிராா்த்தனை நடந்தது. காஞ்சிபுரம் எம்எல்ஏ சி.வி.எம்.பி.எழிலரசன் குடும்பத்தினருடன் வழிபாட்டில் கலந்து கொண்டாா்.